முடி மன்னர்
முடி மன்னர் ================== (ஆறாம் திணை இதழில் எழுதியது) பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு வெளிப்புற படப்பிடிப்பு பார்க்க வந்திருந்த மணியும் சீனுவும் வியப்புடன் பார்த்தார்கள். "அங்க பாத்தியா, ஒரு கூடாரம் போட்டிருக்கு, அங்கதான் இருக்காராம். படம் எடுக்காதப்போ போய் படுத்துக்குவாராம். உள்ள வீடு மாதிரி இருக்குமாம், ஏசி கூட இருக்காம்" "நாம இப்ப போயிப் பாக்கலாமா" "கஷ்டம். வாச்சுமேன் வெரட்டுவான்" "அதோ பாரு, வாச்சுமேன் வெளியே வரான், அவருக்கு ஏதோ வாங்கியாரப் போறான் போல" "சீக்கிரம் வா, போய் பாத்துட்டு வரலாம்" இருவரும் கொட்டகையில் நுழைந்தபோது, சாய்வு நாற்காலியில் அமர்ந்து சிகைக்காய் தூள் விளம்பரத்துக்கு எடுத்த தன் புகைப்படத்தை ஆய்ந்து கொண்டிருந்த நடிகர் செல்வமணி சற்று திகைத்து, "என்ன தம்பிகளா, யாரு உள்ள விட்டாங்க ஒங்கள, என்ன வேணும் உங்களுக்கு" என்றார். "ஒண்ணும் இல்லீங்க. சூட்டிங்க பாக்க வந்தமா. ஒங்களப் பாக்கணும்னு தோணித்து. இங்க இருக்கீங்கன்னு பேசிக்கிட்டாங்க" "ஒங்க 'முடிமன்னன்' படத்த அ...